மக்களவை தேர்தலையொட்டி பாஜக மேலாண்மை குழு பயிலரங்கம்: அண்ணாமலை பங்கேற்பு

மக்களவை தேர்தலையொட்டி பாஜக மேலாண்மை குழு பயிலரங்கம்: அண்ணாமலை பங்கேற்பு
Updated on
1 min read

காட்டாங்கொளத்தூர்: மக்களவை தேர்தல் 2024 குறித்த தமிழ்நாடு பாஜக மேலாண்மை குழுவினருக்கான பயிலரங்கம் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலை.யில் நடைபெற்றது.

இதில் ஹெச்.ராஜா, பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: திமுக 5 முறை ஆட்சி செய்துள்ளது. தமிழகத்தில் 5 மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இருந்த நிலையில், மோடி ஆட்சிக்கு வந்தபிறகு 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம்.

முதல்வருக்கு 65 சதவீதம் ஆதரவு இருந்த நிலையில் தற்போது 36 சதவீதமாக குறைந்துள்ளது. பாஜகவை சேர்ந்த நாங்கள் செய்த நலத்திட்டங்களைக் கூறிமக்களைச் சந்திக்கிறோம். ஆனால்,திமுகவினர் வடக்கு, தெற்கு என்ற பிரிவினை வாதத்தை முன்னிறுத்தி மக்களைச் சந்திக்கிறார்கள். நான் பாதயாத்திரை சென்று மக்களைச் சந்தித்த வகையில் அனைத்து மக்களும் மோடிக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள்.

மீண்டும் மூன்றாவது முறையும் மோடிதான் பிரதமராக வரவேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். இருப்பினும் நாம் ஓய்ந்து விடக்கூடாது. நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். 450 தொகுதிகளைப் பிடித்து தனிப்பெரும்பான்மையோடு மோடியை பிரதமராக அமர வைக்கவேண்டும். அதேபோல் பாதயாத்திரை இறுதிநாளன்று 20 லட்சம் பேர் கண்டிப்பாகக் கலந்து கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நாளை முதல் தேர்தல் வேலையைத் தொடங்க வேண்டும். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று இங்கிருந்து 40 எம்பிக்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in