ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம்: சென்னையில் 2-வது நாளாக அமலாக்கத் துறை சோதனை

ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம்: சென்னையில் 2-வது நாளாக அமலாக்கத் துறை சோதனை
Updated on
1 min read

சென்னை: சென்னை பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது, 2015 - 17 கால கட்டத்தில் அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள், பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ரூ.50 கோடியே 86 ஆயிரத்து 125 லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சமீபத்தில் சோதனை நடத்தினர்.

இதன் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகளும் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் தி.நகரில் உள்ள லேண்ட்மார்க் ஹவுசிங் புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் மேலாளர் உதய குமாரின் நுங்கம்பாக்கம் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

அதே போல், புளியந் தோப்பில் உள்ள கேஎல்பி புராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் சுனில்கேட் பாலியா, மனிஷ் பம்பர் ஆகியோரின் அலுவலகங்கள், வீடுகள், எம்ஜிஎம் கோல்ட் மதுபான ஆலை நிறுவனத்தின் உரிமையாளர் அரவிந்த் வீடு, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆடிட்டர் கணபதி வீடு உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், இந்த இடங்களில் 2-வது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in