Published : 10 Feb 2024 11:54 AM
Last Updated : 10 Feb 2024 11:54 AM

மூன்று - ஒன்று - நான்கு... விசிகவின் விருப்ப நம்பர்!

கடந்த மக்களவைத் தேர்தலில், பானை சின்னத்தில் விசிக தலைவர் திருமாவளவனும், உதயசூரியன் சின்னத்தில் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் களம் கண்டனர். தற்போது பானை சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவது என விசிக உறுதி செய்துள்ளது.

அதேநேரம் 3 மக்களவைத் தொகுதிகள், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்டு பெற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 6 தொகுதிகளின் விருப்பப் பட்டியலையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் வரும் 12-ம் தேதி திமுகவுடனான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு முன்தினமான 11-ம் தேதி முக்கிய நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்துகிறார்.

இதையொட்டி, அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக விசிக தலைமை நிலையச் செயலாளர் அ.பாலசிங்கம் கூறும்போது, "இதுவரை எந்த பட்டியலும் தயாரிக்கப்படவில்லை. 12-ம் தேதி பேச்சுவார்த்தையையொட்டி, தொகுதிகள் முடிவாகும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x