Published : 06 Feb 2018 11:07 AM
Last Updated : 06 Feb 2018 11:07 AM

அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு விண்ணப்பிக்க வரும் 10-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்க வரும் 10-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பணிபுரியும் மகளிர் நலனை கருத்தில் கொண்டு இரு சக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தினை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். இத்திட்டம் ஜெயலலிதா பிறந்த நாளான வரும் 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிப்பதற்கு நேற்று கடைசி நாள் என்பதால் தமிழகம் முழுவதும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இடங்களில் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிப்பதற்கான கூடுதல் கால அவகாசம் வரும் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் பயனாளிகளாக வேண்டும் என்பதற்காகவே இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் புதிய இருசக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகன விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவான தொகையோ, அத்தொகை பயனாளிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x