தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலிருந்து 2 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள், தலைமன்னார் அருகே கடந்த ஜன. 16-ம்தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கைகடற்படையினர் இரு படகுகளையும் பறிமுதல் செய்து, 18 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர்.

இந்த வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிசஜீத், மீனவர்கள் 18 பேரும் இலங்கை எல்லைக்குள் மீண்டும்மீன்பிடித்தால் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும், மார்ச் 20-ம் தேதி படகுகளின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி, வழக்கை தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in