அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாரடைப்பு தடுப்பு மாத்திரை கிடைக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

பாலக்கொல்லை கிராமத்தில் மாரடைப்பு தடுப்பு மாத்திரை பயன்படுத்திய பயனாளியிடம் மாத்திரையின் பயன்பாடு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விசாரித்தார்.
பாலக்கொல்லை கிராமத்தில் மாரடைப்பு தடுப்பு மாத்திரை பயன்படுத்திய பயனாளியிடம் மாத்திரையின் பயன்பாடு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விசாரித்தார்.
Updated on
2 min read

விருத்தாசலம்: தமிழ்நாட்டில் உள்ள 10,999 துணைமற்றும் ஆரம்ப சுகாதார நிலையங் களிலும் மாரடைப்பு தடுப்பு மற்றும் பாம்புக் கடிக்கான மாத்திரைகள் கிடைக்கும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 29 துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.4.68 கோடி செலவில் கட்டப்பட்ட 29 கூடுதல் கட்டிடங்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன் னிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் நேற்று மங்க ளூரில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் 8,713 துணை சுகாதார நிலையங்களும், 2,286 ஆரம்பசுகாதார நிலையங்களும் உள்ளன. இந்த ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு 1,500 சுகாதார நிலையங்கள் வாடகைக் கட்டிடங்களில் இயங்கிவந்த நிலையில், அவை படிப்படியாக சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் நிலையை உருவாக்கி வருகிறோம். அந்த வகையில் தற் போது கடலூர் மாவட்டத்தில் ரூ.4.68கோடி செலவில் 29 துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக் கான கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதவிர ஓரங்கூரில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணி விரைவில் தொடங்க உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல் பாடுகளும் மேம்படுத்தப்பட் டுள்ளது.

தற்போது கரோனா தடுப்பூசி செலுத்திய பின்னர் சிலர் மாரடைப் பால் உயிரிழப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து அத்தகைய மாரடைப்பை தடுக்கும் நடவடிக்கையிலும் தற் போதைய அரசு முயற்சி மேற் கொண்டு, 14 மாத்திரைகள் அடங்கிய மாரடைப்பு தடுப்பு மாத் திரைகளை மருத்துவமனைகளில் இருப்பு வைத்துள்ளது. முதற்கட்ட மாக மாவட்ட மருத்துவமனைகளில் மட்டும் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்கப் பட்டுள்ளது. இந்த மருந்துகள் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்பதை அறிய இன்று ( நேற்று ) பாலக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று திடீர் ஆய்வு செய்த போது, மாரடைப்பு அறிகுறி தென்பட்ட 6 பேர் அந்த மாத்திரையை வாங்கி பயனடைந்துள்ளனர்.

அதேபோல் மங்களூர் ஆரம்பசுகாதார நிலையத்திலும் 4 பேர்அந்த மாத்திரையை வாங்கி பயனடைந்துள்ளனர். இது தவிர ஊரகப் பகுதிகளில் விளை நிலங்களை ஒட்டி வாழும் விவசாயிகள் அவ்வப்போது பாம்புக் கடியில் பாதிக்கப்படுவதை அறிந்து அதற்கான மாத்திரைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. திட்டக்குடி வட்டார மருத்துவ மனையில் ஏற்கெனவே இரு ரத்த சுத்திகரிப்பு இயந்திரம் பயன்பாட்டில் உள்ள நிலையில் கூடுத லாக 3 இயந்திரங்களும், சிடி ஸ்கேன் மற்றும் டிஜிட்டல் எக்ஸ் ரே இயந்திரம் பொருத்தப்படவுள்ளது” என்றார். அப்போது மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஹீரியம் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in