

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். அவரது உடலுடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்கந்தன் சாவடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஆயிரம் விளக்கு, ஜெய்பாளையம், 3-வது தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (30). சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்துவந்தார். அவரது உறவினர் ஒருவர் செம்மஞ்சேரியில் காலமானார். அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கொட்டிவாக்கம் - ஓ.எம்.ஆர். சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது, கந்தன்சாவடிபகுதியில் மெட்ரோ பணிக்காக இரும்புக் கம்பிகளை நிரப்பி சாலையோரம் நின்றிருந்த லாரியின்பின் பகுதியில் விக்னேஷ் ஓட்டிச் சென்ற இருசக்கரவாகனம் மோதியுள்ளது. இதில், பலத்த காயம்அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உடன் பயணித்த அவரது இரு நண்பர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தகவல் அறிந்துதரமணி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம்விரைந்தனர்.இதற்கிடையே, இறப்பு செய்தியை அறிந்து விக்னேஷின் உறவினர்கள், ``லாரி ஓட்டுநர் கவனக்குறைவாக சாலையோரம் லாரியை நிறுத்தி இருந்ததும், அந்த நேரத்தில் மின்விளக்குகள் சரிவர எரியாத காரணத்தாலும்தான் விபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே, விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மெட்ரோ ரயில் நிர்வாகிகள் சம்பவ இடம் வர வேண்டும்'' எனக்கூறிவிக்னேஷ் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பரங்கிலை காவல் துணை ஆணையர் சுதாகர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து, விக்னேஷ் உடல் நேற்று காலை1.45 மணியளவில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.