

திருச்சி: சமூக செயற்பாட்டாளரான பழனி பாபா, நினைவு தினம் நேற்று முன்தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில், பழனிபாபா குறித்து சமூக வலைதளங்களில் பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகப்பிரிவின் மாநிலச் செயலரான புகழ் என்ற புகழேந்திரன் ( 44 ) அவதூறாக பதிவிட்டுள்ளார். இது குறித்து, உறையூர் கிராம நிர்வாக அலுவலர் வடிவேலு, புகழேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், புகழேந்திரனை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதற்கிடையே புகழேந்திரன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் உறையூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் பி.நாகேந்திரன் முன்னிலை வகித்தார். தேசிய பொதுக் குழு உறுப்பினர் புரட்சிக்கவிதாசன் கண்டன உரையாற்றினார். இதில், பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.