

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டை ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கிவைத்தார்.
இதில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் பங்கேற்றன.
350 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். காளைகள் முட்டியதில் வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 46 பேர் காயமடைந்தனர்.
2 காளைகளும் காயமடைந்தன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதேபோல, திருச்சி மாவட்டம் கருங்குளத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அல்லித்துறையில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.