“சந்தர்ப்பவாதத்தின் அடையாளம் நிதிஷ் குமார்” - தமிமுன் அன்சாரி விமர்சனம்

“சந்தர்ப்பவாதத்தின் அடையாளம் நிதிஷ் குமார்” - தமிமுன் அன்சாரி விமர்சனம்
Updated on
1 min read

திருப்பூர்: மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு, திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்க திருப்பூர் வந்த கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் போது, ‘‘பச்சை சந்தர்ப்பவாதத்தின் அடையாளமாக பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமார் மாறி இருக்கிறார். நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைந்த நிலையில், அதில் இடம் பெற்றிருந்த நிதிஷ் குமார் 18 மாதங்களுக்கு முன்பு, எந்த கூட்டணியில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைத்தாரோ, அரசியல் சுயலாபத்துக்காக மீண்டும் அதே கூட்டணியில் இணைந்திருப்பது பச்சை சந்தர்ப்பவாதத்தின் அடையாளம்தான்.

பிஹார் மக்கள் அவரையும், அவர் சார்ந்த கூட்டணியையும் தனிமைப்படுத்த வேண்டும். மக்களின் ஆன்மிக நம்பிக்கையான அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை பாஜக அரசியல் செய்கிறது. மக்களவைத் தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து, நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி பிப்.10-ம் தேதி திருச்சியில் நடத்தப்பட உள்ள மாபெரும் சிறை முற்றுகை போராட்டத்துக்கு பிறகு அறிவிக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in