6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தோட்டக்கலைத் துறை இயக்குனராக இருந்த ஆர். பிருந்தா தேவி சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித் துறை துணைச் செயலாளராக இருந்த கே.தர்பகராஜ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த முருகேஷ் வேளாண் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்னணு கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த எஸ்.அருண்ராஜ் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனராக இருந்த கமல் கிஷோர் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரித்துறை இணை ஆணையராக இருந்த வி.ஆர்.சுப்புலட்சுமி தற்போது வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை ஆட்சியராக இருந்துவந்த முருகேஷ் இப்போது வேளாண் துறை இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தோட்டக்கலை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ரவிச்சந்திரன் உயர்கல்வித் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனராக எம்.லட்சுமி, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் துறை ஆணையராக ஜி. பிரகாஷ், வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக எஸ். நடராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in