Published : 06 Feb 2018 10:08 AM
Last Updated : 06 Feb 2018 10:08 AM

மானிய விலையில் இருசக்கர வாகனம் பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளில் திரண்ட மக்கள்

பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிப்பதற்கு நேற்று கடைசி நாள் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இடங்களில் கூட்டம் அலைமோதியது.

பெரம்பலூர் மாவட்டத்துக்கு வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளை உள்ளடக்கிய ஊரகப் பகுதிகளுக்கு 640 இருசக்கர வாகனங்கள், பெரம்பலூர் நகராட்சி, லப்பைக்குடிகாடு, அரும்பாவூர், பூலாம்பாடி, குரும்பலூர் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளுக்கு 170 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 810 இருசக்கர வாகனங்கள் மானிய விலையில் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம், லப்பைக்குடிகாடு, அரும்பாவூர், பூலாம்பாடி, குரும்பலூர் ஆகிய பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பெறப்பட்டன. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்று இறுதி நாள் என்பதால் இவ்விடங்களில் கூட்டம் அலைமோதியது.

இதில், ஊரகப் பகுதிகளில் இருந்து 1,697 விண்ணப்பங்கள், பேரூராட்சி பகுதிகளில் இருந்து 777 விண்ணப்பங்கள் என மொத்தம் 2,474 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரப்பெற்றுள் ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x