பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: 550-வது நாளை எட்டும் போராட்டம்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: 550-வது நாளை எட்டும் போராட்டம்
Updated on
1 min read

காஞ்சிபுரம்: சென்னையின் 2-வது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூரில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் 550-வது நாளை இன்று (ஜன.26) எட்டுகிறது. இன்றுஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு அம்பேத்கர் திடலில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.இதனையொட்டி அந்தப் பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in