Published : 22 Feb 2018 08:57 PM
Last Updated : 22 Feb 2018 08:57 PM

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி திடீர் மாற்றம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டார். புதிய தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத் தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி, கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டே நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்தார்.

2016 தேர்தலில் தேர்தல் முறைகேடு காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகள் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த தொகுதியின் தேர்தல்களை நடத்தி முடித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் வாக்காளர் பணப் பட்டுவாடா புகாரில் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம்  தேதி ஆர்.கே.நகர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

ராஜேஷ் லக்கானியின் பதவிக் காலத்தில் கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராஜேஷ் லக்கானி மாற்றப்படுவார் என்ற செய்தி வெளியானது. அதன்படி இன்று ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சென்னைப் குடிநீர் வடிகால் வாரியம் மற்றுக் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சத்ய பிரதா சாஹூ தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இவரது சொந்த மாநிலம் ஒடிசா ஆகும். இவர் 1997 ம்ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x