Published : 21 Feb 2018 08:33 PM
Last Updated : 21 Feb 2018 08:33 PM

மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்கள் அறிவிப்பு

கமல் தொடங்கியுள்ள 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மைதானத்தில் இன்று தனது கட்சியின் கொடியை கமல்ஹாசன் ஏற்றினார். பிறகு மக்கள் நீதி மய்யம் தான் தன் கட்சியின் பெயர் என்று கமல் அறிவித்தார். இந்நிலையில், கட்சிக்காக மய்யம்.காம் என்ற அதிகாரபூர்வ இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

மகேந்திரன்,அருணாசலம், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீப்ரியா, ராஜ்குமார்,கமிலா நாசர், சவுரிராஜன், ராஜசேகரன், சி.கே.குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜநாராயணன், ஆர்.ஆர்.சிவா ஆகியோர் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த பொறுப்பாளர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x