Published : 01 Feb 2018 09:14 AM
Last Updated : 01 Feb 2018 09:14 AM
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு நடத்தப்பட வாய்ப்பில்லை. அதனால், பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. மேலும், தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்-லைன் முறையில் நடத்தப்பட உள்ளது. தற்போது, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கல்லூரி வளாகம் மற்றும் பொது இடங்களில் ஆயுதங்களை கொண்டு வரும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT