Published : 21 Jan 2024 04:49 AM
Last Updated : 21 Jan 2024 04:49 AM

பொங்கல் விழாவையொட்டி தமிழகத்தில் ரூ.673 கோடிக்கு மது விற்பனை

சென்னை: பொங்கல் விழாவையொட்டி தமிழகத்தில் ரூ.673 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த ஜன.14 முதல் 17-ம்தேதி வரை (16-ம் தேதி திருவள்ளுவர் தினம் விடுமுறை) 3 நாட்களில்,டாஸ்மாக் கடைகளில் ரூ.673 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக 3 நாட்களில் ரூ.140.60 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாகவும், அடுத்தபடியாக சென்னை மண்டலம் ரூ.136.93 கோடி, திருச்சி மண்டலம் ரூ.135.40கோடி, சேலம் மண்டலம் 131.10 கோடி, கோவை மண்டலம் 128.68 கோடிக்கு மது விற்பனை நடத்திருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x