

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக முன்னாள் பொருளாளராகவும், முன்னாள் மின்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆற்காடு வீராசாமி ( 92 ). வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து வட பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு முட நீக்கியல் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.