தமிழக மீனவர்கள் 10 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு

தமிழக மீனவர்கள் 10 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு

Published on

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கடந்த திங்கள்கிழமை சிறைபிடிக்கப்பட்ட 10 தமிழகமீனவர்கள் யாழ்ப்பாணம்சிறையில் அடைக்கப்பட் டனர்.

யாழ்ப்பாணம் பருத்தித் துறை கடற்பகுதியில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு விசைப்படகு மற்றும் அதிலிருந்த 10 மீனவர்களை எல்லை தாண்டிய குற்றச் சாட்டின் பேரில், இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின்போது கடந்த திங்கள்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் பருத்தித்துறை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத் தப்பட்டனர். 10 பேரையும் ஜன.29 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து தமிழக மீனவர்கள் 10 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in