Published : 25 Aug 2014 09:16 AM
Last Updated : 25 Aug 2014 09:16 AM
கும்பகோணம் அருகே ரயில் மோதியதில் 137 செம்மறி ஆடுகள் இறந்தன.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சந்தானம், கடலூர் மாவட்டம் மங்களம்பேட்டையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோர் 350 செம்மறி ஆடு களை, திருவிடைமருதூர் பகுதி யில் அறுவடை செய்யப்பட்ட வயல் களில் எருவுக்காக கிடை போடுவ தற்காக கொண்டு வந்திருந்தனர்.
இதற்காக, விஸ்வநாதபுரத்தில் உள்ள செல்வம் என்பவரது வயலில் பட்டி அமைத்திருந்தனர். பகலில் மேய்ச்சலுக்குப் பிறகு, இரவு நேரத்தில் கம்பி வலை களைக் கொண்டு அமைக்கப்பட்ட பட்டிகளில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு மழை பெய்ததால், வயலில் அமைக்கப்பட்டிருந்த பட்டியில் மழை நீர் புகுந்து, பட்டி தடுப்புகள் சாய்ந்தன. இதனால் அங்கிருந்து வெளியேறிய ஆடுகள், அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் படுத்துக் கொண்டன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கும்பகோணம்-மயிலாடுதுறை வழித் தடத்தில் சென்ற ரயில், ஆடுகள் மீது மோதியது. இதில் 137 செம்மறி ஆடுகள் இறந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. விபத்து குறித்து ரயில்வே காவல் ஆய்வாளர் பழனிசாமி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT