Published : 01 Jan 2024 06:25 AM
Last Updated : 01 Jan 2024 06:25 AM

மேம்பால கட்டுமானப் பணியை முன்னிட்டு புளியந்தோப்பு பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை மாநகர காவல் போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இப்பணிக்காக ச்

அதன்படி, பெரம்பூர் மற்றும் வியாசர் பாடியில் இருந்து டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக புரசைவாக்கம் நோக்கி வரும்வாகனங்களுக்கான சாலை ஒருவழிப் பாதையாக செயல்படுத்தப்படும். புரசைவாக்கம், டவுட்டனில் இருந்து பெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம் செல்ல டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வரும் வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, ஸ்டீபன்சன் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை தெற்கு, முரசொலி மாறன் மேம்பாலம், பெரம்பூர் ரயில் நிலையம் சந்திப்பு வழியாக செல்லலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x