Published : 03 Jan 2018 02:29 PM
Last Updated : 03 Jan 2018 02:29 PM

5 மாதங்களாக கழிவுநீராகச் செல்லும் சிறுவாணி குடிநீர்: கோவை காந்திபார்க் பகுதி மக்கள் வேதனை

கடந்த ஆண்டிலிருந்து இப்போது வரை தட்டுப்பாடாக இருக்கும் சிறுவாணி குடிநீர், கடந்த ஐந்து மாதங்களாக சாக்கடையாக கோவை முத்தண்ணன் குளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

கோவை மாநகராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட காந்திபார்க் - தொண்டாமுத்தூர் சாலையில் உள்ளது டிரைவர் ஸ்டாப் பேருந்து நிறுத்தம். அங்குள்ள சாக்கடைப் பாலம் வழியாக முத்தண்ணன் குளத்துக்கு கழிவுநீர் செல்கிறது. அதன் அருகே இரும்பு குழாய் ஒன்றில் சிறுவாணி குடிநீர் விநியோகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை வெள்ளத்தில் பாலம் சேதமடைந்தபோது அது சரிசெய்யப்பட்டது. அப்போது, அந்த குடிநீர் குழாயும் சேதமடைந்தது. சரிவர சரிசெய்யப்படாமல் விட்டதால் அதன் சேதம் அதிகமானது. இதனால் கடந்த 5 மாதங்களாக சிறுவாணி குடிநீர் பெருமளவில் வீணாகி சாக்கடையாக குளத்துக்குச் செல்கிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘கடந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோதும் மாநகராட்சி எங்களை கண்டுகொள்ளவில்லை. இப்போது தண்ணீர் சாக்கடையில் செல்கிறது என்றபோது கண்டுகொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம், மாநகராட்சிக்கு பல முறை புகார் தெரிவித்தும் பயனில்லை. முத்தண்ணன் குளத்தில் தேங்கியிருக்கும் கழிவுகளால் இப்பகுதியின் நிலத்தடி நீரே பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசுபட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, அந்த குளத்துக்கான கழிவுநீர் வாய்க்காலை ஒட்டி குடிநீர் குழாய் உடைப்பும் இருப்பது நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x