Published : 15 Jan 2018 02:08 PM
Last Updated : 15 Jan 2018 02:08 PM

ஞாநி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

பத்திரிகையாளர் ஞாநியின் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தி:

“மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஞானி இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். ஞாநி, பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்தவர்.

பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியவரும், கடின உழைப்பாளியும், அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடிய பண்பாளருமான ஞாநியின் மறைவு பத்திரிகை துறைக்கு பேரிழப்பாகும்.

ஞாநியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.”

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x