Published : 23 Jan 2018 09:00 PM
Last Updated : 23 Jan 2018 09:00 PM
காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுகவும் பங்கேற்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா பகுதிகளில் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் மிக மோசமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியிருப்பதால், தமிழகத்திற்கு 15 டி.எம்.சி. காவிரி நீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜனவரி 28 ஞாயிற்றுகிழமை அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் பாதுகாப்பு இயக்கங்களின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு தர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை கோரிக்கை வைத்தனர். இதை ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்பது என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகி மற்றும் கட்சித் தொண்டர்களுடன் இணைந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT