Published : 30 Jan 2018 09:46 AM
Last Updated : 30 Jan 2018 09:46 AM
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக புழல் சிறையில் உள்ள நாதுராம் மற்றும் அவரது 2 கூட்டாளிகளை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ராஜமங்கலம் குற்றப்பிரிவு போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகளை குஜராத்தில் ராஜஸ்தான் போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர்.
இந்த தகவல் சென்னை போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னையில் இருந்து வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் எச்.எம்.ஜெயராம் தலைமையிலான தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் சென்றனர். நீதிமன்ற உத்தரவின்படி நாதுராம், அவரது 2 கூட்டாளிகளும் சென்னை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சென்னைக்கு அழைத்துவரப்பட்ட அவர்கள், எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நாதுராம், அவரது கூட்டாளிகளான தினேஷ் சவுத்ரி, புத்தாராம் ஆகிய 3 பேரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ராஜமங்கலம் குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்தனர். இதற்கான அனுமதி வழங்க கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். மாஜிஸ்திரேட் கோபிநாத் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வர உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT