Published : 24 Jan 2018 09:38 PM
Last Updated : 24 Jan 2018 09:38 PM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ''தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தென் மாவட்ட கடலோரப் பகுதியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. தற்போது அந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்துவிட்ட நிலையில், அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் குறைந்தபட்ட வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ட வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT