Published : 17 Jan 2018 09:53 PM
Last Updated : 17 Jan 2018 09:53 PM

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: வாசன் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ராமேஸ்வரம் மண்டபம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று அதிகாலை நடுக்கடலில் மின்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் 16 மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. எனவே, மத்திய அரசு முதலில் இலங்கை அரசோடு பேசி இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்கவும், விசைப்படகுகளை மீட்கவும் வலியுறுத்த வேண்டும். அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் வரையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யவோ, படகுகளை பறிமுதல் செய்யவோ கூடாது என்பதையும் அழுத்தத்தோடு தெரிவிக்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x