Published : 16 Jan 2018 08:50 AM
Last Updated : 16 Jan 2018 08:50 AM

திருவள்ளுவர் தின பேரணி

தமிழர் திருநாள், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குன்றத்தூரில் திருவள்ளுவர் திருவுருவச் சிலை ஊர்வலம் மற்றும் பேரணி நேற்று முன்தினம் நடைபெற்றது.

திருவள்ளுவர் அறக்கட்டளைத் தலைவர் ம.குப்புசாமி தலைமையில் ஊர்வலம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் குழந்தைகள், மாணவர்கள் திருக்குறளின் பெருமை மற்றும் அதன் பொருளை உரைத்தனர்.

இவ்விழாவில் முன்னாள் துணைவேந்தர் பொற்கோ, கலைமாமணி கே.பி. அறிவனந்தம் மற்றும் சான்றோர்களும் பொதுமக்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் ஆண்டு 2049 ஆண்டு பிறப்பினையும் பொங்கல் திருநாளையும் சிறப்பாகக் கொண்டாடினர். முன்னதாக குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 6 அடி உயரம், 540 கிலோ எடையில் திருவள்ளுவருக்கு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தை முதல் நாளான நேற்று முன்தினம் சிலைக்கு மாலை அணிவித்து திருவள்ளுவர் திருமேனி வழிபாடு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x