Published : 28 Jan 2018 09:20 AM
Last Updated : 28 Jan 2018 09:20 AM

ரூ. 4 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா பறிமுதல்: இருவரை கைது செய்து நடவடிக்கை

குன்றத்தூரில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்காவை குன்றத்தூர் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரைக் கைது செய்தனர்.

குன்றத்தூரில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் அதிக அளவில் பதுக்கி விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போரூர் உதவி ஆணையர் கண்ணன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்தூரில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

மினி வேனை மடக்கி சோதனை

அப்போது அந்த வழியே சந்தேகத்துக்கு இடமாக வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்து பார்த்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்கள் எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த லோடு ஆட்டோ மற்றும் அதனை ஓட்டி வந்த இருவரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள், சேலம், திருக்காவனூரைச் சேர்ந்த சதிஸ்குமார்(27), பூபதி(23) என்பது தெரியவந்தது. இருவரும் பெங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு குட்கா கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து 1 டன் குட்காவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் என போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சதிஸ்குமார், பூபதி ஆகியோரைக் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x