Published : 24 Jan 2018 10:48 AM
Last Updated : 24 Jan 2018 10:48 AM
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தேவர் பேரவையினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, தேவர் பேரவையின் மாநிலத் தலைவர் மு.முத்தையா, வட மண்டலத் தலைவர் தி.சி.தம்பிதுரை, மாவட்ட நிர்வாகி லிங்கதுரை தலைமையிலான நிர்வாகிகள் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக வந்தனர். மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை சூட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT