Published : 12 Jan 2018 09:21 AM
Last Updated : 12 Jan 2018 09:21 AM

எழுத்தாளர் மாலனுக்கு ‘பாரதிய பாஷா’ விருது

இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று என மதிக்கப்படும் 'பாரதிய பாஷா விருது' இவ்வாண்டு தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது.

இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று ‘பாரதிய பாஷா’ விருது. இந்த ஆண்டுக்கான ‘பாரதிய பாஷா’ விருது எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது. கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இலக்கிய அமைப்பான ‘பாரதிய பாஷா பரிஷத்’, இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

இந்த அமைப்பு ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதன் படைப்பாளிகளுக்கு ‘பாரதிய பாஷா’ விருது வழங்குகிறது.

மார்ச் மாதம் விருது விழா

ரூ.1 லட்சம் பரிசுத் தொகைக் கொண்ட இந்த விருது வழங்கும் விழா மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் மாலன் இலக்கிய உலகில் பல சிறப்புக்களைப் பெற்றவர். 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள மாலன், சாகித்ய அகாடமியின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றவர். சரஸ்வதி சம்மான் விருது வழங்கும் கே.கே.பிர்லா பவுண்டேஷனில் தமிழ் மொழிக் குழுத் தலைவராகவும் உள்ள இவர், பல விருதுகளைப் பெற்றவர்.

கடந்த ஆண்டுகளில் ஜெயகாந்தன், சிவசங்கரி, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், பிரபஞ்சன், வைரமுத்து ஆகியோருக்கு இந்த ‘பாரதிய பாஷாவிருது’ வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x