Published : 05 Jan 2018 10:05 AM
Last Updated : 05 Jan 2018 10:05 AM

டிப்பர் லாரி மோதி 63 ஆடுகள் பலி

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கலங்கல் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், ரவி, ராஜேந்திரன், நஞ்சப்பன், பெருமாள் ஆகியோர் செம்மறி ஆடு மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 600 ஆடுகள் வைத்து வளர்த்து வந்தனர்.

நேற்று மதியம் பீடம்பள்ளி பிரிவு அம்மன்கோயில் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றபோது, பாப்பம்பட்டி சாலையில், கிரஷர் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஆட்டு மந்தைக்குள் புகுந்தது.

இதில் 63 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாயின. சில ஆடுகள் பலத்த காயமடைந்தன. சூலூர் போலீஸார், விசாரணை நடத்தினர். இறந்த, காயமடைந்த ஆடுகளுக்கு இழப்பீடு கொடுப்பதாக லாரி உரிமையாளர் உறுதியளித்ததால், பிரச்சினை முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x