Published : 22 Jan 2018 11:23 AM
Last Updated : 22 Jan 2018 11:23 AM
மத்திய அரசின் மின் திட்டங்களை செயல்படுத்த, தமிழ்நாடு மின்வாரியம் 3,000 மின்மாற்றிகளை வாங்கத் தீர்மானித்துள் ளது.
மத்திய அரசு தனது ஒருங்கிணைந்த மற்றும் தீன்தயாள் மின்திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து, இப்பணிகளுக்காக 3,000 மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்கள்) மற்றும் மின்கம்பிகள் உள்ளிட்ட உபகரணங்களை வாங்க தமிழ்நாடு மின்வாரியம் திட்ட மிட்டுள்ளது.
மின்உபகரணங்களை கொள்முதல் செய்தல், மின் நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு மின்வாரிய இயக்குநர்கள் குழுவிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். அந்த வகையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த உபகரணங்களை வாங்க மின்வாரிய இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, இந்த உபகரணங்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரி வித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT