கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Published on

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னைவானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் நோக்கி வீசும் கிழக்குதிசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு (டிச. 8, 9,10)சில இடங்களிலும், வரும் 11, 12,13-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி மற்றும் கோவைமாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர்மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in