Published : 08 Dec 2023 05:47 AM
Last Updated : 08 Dec 2023 05:47 AM

ஜாக்டோ-ஜியோ போராட்டம் தள்ளிவைப்பு

கோப்புப் படம்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வெளியிட்டு உள்ள அறிக்கை:

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு நிவாரணப் பணிகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தும் செய்துவருகின்றனர். எனவே மாவட்டத் தலைநகரங்களில் நாளை (டிச.9) நடத்தத் திட்டமிட்டிருந்த மறியல் போராட்டத்தைத் தள்ளிவைக்குமாறு பெரும்பாலான ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அதையேற்று நாளை நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்படுகிறது. விரைவில் மாற்றுத் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x