அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 12-வது முறையாக நீட்டிப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 12-வது முறையாக நீட்டிப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 12-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தஜூன் 14-ம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததது. இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, காணொலி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமர்வுநீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 12-வது முறையாக வரும் டிச.15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in