Published : 25 Jan 2018 10:22 AM
Last Updated : 25 Jan 2018 10:22 AM

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சபாநாயகர் தொகுதியில் கடையடைப்பு

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ள நிலையில், பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பாக கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. 

தமிழகத்திலேயே பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சபாநாயகர் தொகுதியான அவிநாசியில்தான் முதன்முதலாக கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்து கட்டண உயர்வை எதித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x