Published : 05 Jan 2018 08:25 PM
Last Updated : 05 Jan 2018 08:25 PM

இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி மூலம் 3,235 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது: வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு

இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக ஏறத்தாழ 3 ஆயிரத்து 235 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்று அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, இதற்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டது. இந்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையளத்திலும் (www.tnpsc.gov.in) தெரிந்துகொள்ளலாம். அதன்படி, இந்த ஆண்டு குரூப்-2 பதவிகள், தொழிலாளர் அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், உதவி தோட்டக்கலை அலுவலர், மீன்வள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், அரசு உதவி வழக்கறிஞர், அருங்காட்சியக காப்பாட்சியர், நூலகர், உடற்கல்வி இயக்குனர் என 23 விதமான பதவிகளில் 3 ஆயிரத்து 235 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வுமுறை, பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தேர்வுக்கால அட்டவணையைப் பார்க்க: http://www.tnpsc.gov.in/2018_ARP_FINAL.pdf

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x