Published : 03 Dec 2023 09:02 PM
Last Updated : 03 Dec 2023 09:02 PM

மிக்ஜாம் புயல் | 4 மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை

கோப்புப்படம்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக நாளை (டிச.4) திங்கட்கிழமை அன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பொழிவும், பலத்த காற்றும் வீசப்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை ஒருநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு முன்னெச்சரிக்கை கருதி விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x