Published : 17 Jan 2018 09:22 AM
Last Updated : 17 Jan 2018 09:22 AM
சென்னை அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் மதுவிலக்கு சம்பந்தமான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் வரும் 19-ம் தேதி ஏலம் விடப்படுகின்றன.
பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு அவை ஏலம் விடப்படுகின்றன. வாகனங்களை ஏலம் கேட்க விரும்புபவர்கள் முன் வைப்பு கட்டணத் தொகையாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் 14.5 சதவீத விற்பனை வரி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும்போது முன் வைப்பு கட்டண தொகை அதில் சரி செய்யப்படும். ஏலத்தில் கலந்துகொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை ஏலத்தின் முடிவில் திருப்பித்தரப்படும். மதுவிலக்கு அலுவலகத்தில் ஏலத்தில் விடப்படவுள்ள வாகனங்களை இன்று (ஜன.17) நேரில் பார்வையிடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT