Published : 12 Jan 2018 08:24 AM
Last Updated : 12 Jan 2018 08:24 AM
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2001 அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நடைபெற்ற தேர்தல் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மக்கள் வாக்களித்து நேரடியாகவே தேர்வு செய்தனர். அப்போது சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் கவுன்சிலர்களால் தேர்வு செய்யும் முறையும், 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் நேரடியாக தேர்வு செய்யும் முறையும் வந்தது.
ஆனால், கடந்த 2016-ல் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மீண்டும் கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் அது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், தற்போது மீண்டும் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மக்கள் வாக்களித்து நேரடியாக தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT