Published : 04 Jan 2018 11:42 AM
Last Updated : 04 Jan 2018 11:42 AM
தமிழக சட்டப்பேரவை வரும் 8-ம் தேதி கூடவுள்ள நிலையில் அவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தன. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓரணி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்னொரு அணி என கட்சி உடைந்தது. கட்சி உடைந்ததால், சட்டப்பேரவை முன்னவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.
தற்போது, இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில் அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா காலத்தில் ஓ.பன்னீர்செல்வம்தான் அவை முன்னவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT