Published : 27 Jan 2018 10:24 PM
Last Updated : 27 Jan 2018 10:24 PM

நீதிபதி மகளிடம் செல்போன் பறித்த 3 இளைஞர்கள் கைது

கோட்டூர்புரத்தில் நீதிபதி மகளிடம் செல்போனை பறித்துச் சென்ற மூன்று இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் லீலாவதி, சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகள் அபூர்வா ஹரி (20). இவர் கடந்த 20-ம் தேதி கோட்டூர்புரம் சாலையில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரிடமிருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்றார்கள்.

இது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாவட்ட நீதிபதி அளித்த புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்தில் கைப்பற்றிய கண்காணிப்பு கேமரா பதிவில் கிடைத்த உருவத்தை வைத்து விசாரணை நடத்தியதில் செல்போனை பறித்துச் சென்றவர் அண்ணாசாலை காவல் நிலையத்தில் ஏற்கெனவே செல்போன் பறிப்பில் கைதான ராயப்பேட்டை புதுக்கல்லூரி பின்புறம் உள்ள வேல்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பது தெரியவந்தது.

பின்னர் அவரையும் மோட்டார் சைக்கிளை ஓட்டிய ஐஸ் ஹவுஸ் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த புருஷோத் மற்றும் செல்போனை வாங்கி மறைத்து வைத்திருந்த இன்னொரு நபரையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x