Published : 07 Jan 2018 11:36 AM
Last Updated : 07 Jan 2018 11:36 AM
சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக வரும் 9-ம் தேதி நடைபெறும் அனைத்து உறுப்பினர்களுடனான கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பசுமை தீர்ப்பாய அலுவலக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக மத்திய நிதிச் சட்ட விதிகள் அண்மையில் திருத்தப்பட்டன. அதை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால் நாடு முழுவதும் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வுகளில் காலியாக உள்ள உறுப்பினர் இடங்களை நிரப்ப முடியவில்லை.
சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாய அமர்வில் ஒற்றை உறுப்பினரான எம்.எஸ்.நம்பியார், கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வுபெற்றார்.
இதனால் கடந்த புதன்கிழமையிலிருந்து இங்கு வழக்கு கள் விசாரிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. அதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான முக்கிய வழக்குகளின் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். அமர்வுகளின் உறுப்பினர்கள் இல்லாத நிலையில் அவர்களின் உதவியாளர்கள், ஓட்டுநர்கள், சுருக்கெழுத்தர்கள் உள்ளிட்டோருக்கு பணிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் வரும் 9-ம் தேதி டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் (பொறுப்பு) யு.டி.சால்வி தலைமையில் அந்தந்த அமர்வுகளில் உள்ள உறுப்பினர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், தற்போது உள்ள உறுப்பினர்களைக் கொண்டு சென்னை யில் உள்ள அமர்வின் வழக்குகளை, வாரத்தில் சில தினங்களில் விசாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக பசுமை தீர்ப்பாய அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT