நடிகை கவுதமி புகாரில் கட்டுமான நிறுவன அதிபர், மனைவிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

நடிகை கவுதமி
நடிகை கவுதமி
Updated on
1 min read

சென்னை: நடிகை கவுதமி அளித்த புகாரின்பேரில் கட்டுமான நிறுவன அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிரபல நடிகை கவுதமி சென்னை காவல் துறையில் கடந்த மாதம் அளித்த புகார் மனுவில் கட்டுமான நிறுவன அதிபரான அழகப்பன் என்பவர் எனது இடத்தை விற்பனை செய்து தருவதாக கூறி ரூ.25 கோடி வரை மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.

இதையடு்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அழகப்பன் உள்ளிட்ட சிலருக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அழகப்பன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in