Published : 18 Jan 2018 09:13 PM
Last Updated : 18 Jan 2018 09:13 PM

4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ''தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். குளிர்கால மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை.

அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் உள் பகுதியில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கும். சென்னையில் பொதுவாக வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு அல்லது அதிகாலை நேரத்தில் மூடுபனி நிலவ வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாக இருக்கும்'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x