Published : 17 Jul 2014 10:02 AM
Last Updated : 17 Jul 2014 10:02 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை இரண்டாம் கட்ட கவுன்சலிங் 21-ம் தேதி தொடக்கம்- திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை எம்சிஐ வழங்கியுள்ளது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட கவுன்சலிங் கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கவுன்சலிங்கில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,023 எம்பிபிஎஸ் இடங் கள், 7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு ஒதுக் கப்பட்ட 498 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள் என மொத்தம் 2,606 இடங்கள் நிரப்பப்பட்டது.

இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு கூடுதலாக அதிகரிக் கப்பட்ட 50 இடங்கள் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுத லாக அதிகரிக்கப்பட்ட 25 இடங்கள் என மொத்தம் 175 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத் துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனுமதியை இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) வழங்கி யுள்ளது. இதையடுத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங்கை வரும் 21-ம் தேதி நடத்த மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக டிஎம்இ அதிகாரிகள் கூறியதாவது:

திருவாரூர், திருச்சி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 175 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 26 இடங்கள் (15 சதவீதம்) போக, மாநில அரசுக்கு 149 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதேபோல கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் இருந்து மாநில அரசுக்கு 65 எம்பிபிஎஸ் இடங்கள் வழங்கப்படுகிறன. 19 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு சுமார் 930 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. மேலும் முதல் கட்ட கவுன்சலிங்கில் தேர்வான 25 மாணவ, மாணவிகள் தங்களுடைய எம்பிபிஎஸ் பிடிஎஸ் இடங்களை ஒப்படைத்துவிட்டு, பொறியியல் படிப்புக்கு சென்றுள்ளனர். இந்த அனைத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களும் இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் நிரப்பப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டாம் கட்ட கவுன்சலிங் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. கவுன்சலிங்கை 5 நாட்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். என்று அவர்கள் தெரிவித்தனர்.

5 தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை

இந்த ஆண்டு 7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) அனுமதி வழங்கியுள்ளது.

5 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு எம்சிஐ அனுமதி வழங்கவில்லை. இந்த 5 தனியார் கல்லூரிகளில் தலா 150 இடங்கள் வீதம் மொத்தம் 750 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

இந்த 5 தனியார் கல்லூரிகளுக் கும் அனுமதி கிடைத்திருந்தால், மாநில அரசுக்கு சுமார் 450 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்திருக்கும்.

அனுமதி கிடைக்காத 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் விவரம்:

1. மாதா மருத்துவக் கல்லூரி (சென்னை).

2. ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி (சென்னை).

3. தாகூர் மருத்துவக் கல்லூரி (சென்னை).

4. அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி (சேலம்).

5. சென்னை மருத்துவக் கல்லூரி - எஸ்ஆர்எம் (திருச்சி).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x