Published : 27 Jan 2018 08:45 AM
Last Updated : 27 Jan 2018 08:45 AM

அரசியல் கட்சி அலுவலகங்களில் குடியரசு தின கொண்டாட்டம்: தலைவர்கள் தேசிய கொடி ஏற்றினர்

சென்னையில் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்களில் நேற்று குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக் கொடியேற்றினார்.

தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கொடியேற்றினார். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொஹிதீன் மண்ணடியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

தியாகராய நகரில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் தேசியக் கொடியை ஏற்றி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். அசோக் நகரில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் தேசியக் கொடியை ஏற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x