Published : 11 Jan 2018 09:29 AM
Last Updated : 11 Jan 2018 09:29 AM
மதிமுகவின் 26-வது பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 6-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதிமுகவின் 26-வது பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஈரோடு, ராமநாதபுரம் புதூரில் உள்ள பிளாட்டினம் மஹாலில் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெறும்'' என தெரிவித்துள்ளார்.
1994-ல் தொடங்கப்பட்ட மதிமுக 24-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 1999, 2004 மக்களவைத் தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் அக்கட்சிக்கு எதிராக மதிமுக செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவளித்தது.
திமுகவுடனான கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்நிலையில் மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT