Published : 23 Jan 2018 09:27 AM
Last Updated : 23 Jan 2018 09:27 AM
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் முதல்வர் கே.பழனிசாமிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ்
புதிய இருசக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகன விலையில் 50 சதவீதம் எது குறைவான தொகையோ, அத்தொகை பயனாளிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறன் மகளிருக்கு 4 சதவீத எண்ணிக்கை முன்னுரிமையில் வழங்கவும் விதிமுறைகளில் வகை செய்யப்பட்டுள்ளது. ஊனமுற்றோர் புதிய உரிமைகள் சட்டம் (2016) பிரிவு-24ன்படி மத்திய, மாநில அரசுகள் இயற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் மற்றவர்களுக்கு இயற்றும் திட்ட ஒதுக்கீட்டைவிட மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் என சட்டம் வலியுறுத்துவதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, அம்மா இருசக்கர வாகன திட்டத்திலும், வாகன விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது 50% மானியம் என்ற பொது விதியில் இருந்து மாற்றி, மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் கூடுதலாக மானியத் தொகையை வழங்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT